ஜே.என்.யு. நுழைவுத் தேர்வு இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம்..

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (ஜே.என்.யு.இ) செப்டம்பர் 20 முதல் 23 வரை இரண்டு அமர்வுகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.என்.யு. நுழைவுத் தேர்வுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலைக் கழகத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் jnuexams.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.என்.யு. நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும்.காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 6 மணி நேரம் வரை நடைபெறும்.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Wed Jul 28 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 117, சென்னை 164, கோவையில் 179 பேரும், ஈரோட்டில் 140 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி 21,521 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 29 […]
district-wise-corona-status-in-TN-28-7-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய