
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையானது பெரும் பாதிப்பையும் ,அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது.இந்த பாதிப்புக்கு முக்கிய காரணமான அமைந்தது டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆகும்.இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது.
தற்போதைய புதிய மாற்றமானது, சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவுவதாகவும் டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மேலும் அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ்-கொரோனா வைரஸ் 2’ மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என்றாலும், அதைத்தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்பதே விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.