இன்றைய ராசி பலன்கள் : 16 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் ஒரு சில குழப்பங்கள் வந்து போகும்.செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படலாம்.உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .மற்றவர்களிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும் .பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை .வியாபாரத்தில் லாபமானது மந்தமாகவே இருக்கும் .

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றியானது கிடைக்கும் .எதிலும் தைரியத்தோடும் துணிச்சலோடும் செயல்படுபவீர்கள் .குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .கொடுத்த கடன்கள் விரைவில் வசூலாகும் .எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையை கடைபிடித்தல் நல்லது .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் ,சுறு சுறுப்பாகவும் காண்பீர்கள் .குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் .குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது பயனுள்ளதாக இருக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறன் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் .தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே அமையும் .

கடகம்

இன்று உங்கள் மனதிற்கு சந்தோஷம் நிறைந்த நாளாக அமையும் .பிள்ளைகளால் வீண் அலைச்சல் ஏற்படலாம் .எந்த காரியத்திலும் சிந்தித்து செயல்படுதல் நல்லது .கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் .குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் .எந்த காரியத்திலும் சிந்தித்து செயல்படுதல் நல்லது .

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்
.குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடப்பதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நண்பர்களிடம் எதிர்ப்பார்த்த உதவியானது கிடைக்கும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.

கன்னி

இன்று நீங்கள் எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும் .உறவினர்களின் வருகையால் சந்தோஷமானது அதிகரிக்கும் .சகோதரர்களால் எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள் .

துலாம்

துலாம் ராசி நண்பர்களே இன்று எதிலும் பொறுமையை கடைபிடித்தல் அவசியமாகும் .வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு கிடைக்கும் .சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும்.பழைய பாக்கிகள் வந்து சேரும் .புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சந்தோஷம் நிறைந்த நாளாக அமையும் .மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய சுப செய்திகள் தேடி வரும் .குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து நடப்பது அவசியமாகும் .தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கி ஒற்றுமையானது அதிகரிக்கும் .

தனுசு

இன்று நீங்கள் வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருத்தல் நல்லது .திடீர் செலவுகள் ஏற்படும் என்பதால் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் உண்டாகலாம் .வியாபாரத்தில் விற்பனையானது சற்று மந்தமாகவே நடைபெறும் .கடன் தொல்லைகள் நீங்கும் .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று பல காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரலாம் .தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும்.பெரிய மனிதர்களின் அறிமுகமானது கிடைக்கும் .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் தேடி வரும்.பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பார்கள் . தொழிலில் சில மாற்றங்களும் முன்னேற்றமும் அதிகரிக்கும் .சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும்.குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படலாம் .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும்.

மீனம்

இன்று உங்கள் மனதில் ஒரு சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் .வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகலாம் .எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும்.வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .இன்று நீங்கள் சிந்தித்துச் செயல்படவேண்டிய நாளாகும் .

Next Post

இந்தியாவில் முதன் முறையாக - குழந்தைகள் நேய காவல் பிரிவு - திருச்சியில் தொடங்கப்பட்டது !!

Mon Nov 16 , 2020
குழந்தைகள் நேய காவல் பிரிவு ஆனது இந்தியாவில் முதன் முறையாக குழந்தைகளுக்கென காவல் பிரிவானது திருச்சியில் தொடங்கப்பட்டது . குழந்தைகள் நேய காவல் பிரிவு: குழந்தைகள் நேய காவல் பிரிவு இந்தியாவில் முதன் முறையாக திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 10 இடங்களில் காவல் துறை சார்பாகவும்,தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து ,குழந்தைகளுக்கென பிரத்தியேக காவல் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது . குழந்தைகளுக்கென 2015 ஆம் ஆண்டு இளைஞர் நீதி […]
save-and-children-kuzhanthigal-neya-kaaval-pirivu-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய