இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் புதிய சாதனை : சர்வதேச போட்டியில் 10,000 ரன்கள் குவிப்பு ..

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்.மேலும்,இவர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ஒரு நாள் ஆட்டங்களை ஆடிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இவர் இதுவரை 211 ஒரு நாள் போட்டிகளிலும் ,89 டி20 போட்டிகளிலும் மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.இந்நிலையில் இவர் தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் 36 (50 பந்துகள், 5 பவுண்டரிகள்) ஓட்டங்களை எடுத்து ,சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ,இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வார்ட்ஸ் (இவர் 309 ஆட்டங்களில் 10,273 ஓட்டங்களை பெற்றுள்ளார்) படைத்த சாதனையை தொடர்ந்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீராங்கனை என்ற பெருமையையும் மிதாலி ராஜ் பெற்றுள்ளார்.மேலும் இவர் சார்லட் எட்வார்ட்ஸின் சாதனையை முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் : பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு ..

Tue Mar 16 , 2021
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ,பின்னர் படிப்படியாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடைப்பெற்று வந்தது. தற்போது,அனைத்து பள்ளிகளும் மார்ச் மாதத்துடன் மூடப்படுவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.இது முற்றிலும் தவறான தகவல் எனவும் ,ஏப்ரல் 1 முதல் வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார் . கொரோனா பரவல் ஆனது […]
school-reopen-from-april-1
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய