
இந்தியாவின் புகழ்ப்பெற்ற இசையமைப்பாளரும் ,ஆஸ்கார் நாயகனுமான ஏ.ர்.ரஹ்மான் ,BAFTA அமைப்பின் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
BAFTA அமைப்பின் முக்கிய நோக்கமானது ,சிறந்த கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக ,ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி திரைப்படக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது .இந்த அமைப்பானது தற்போது இந்தியாவில் தடம் பதித்து ,இங்குள்ள கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது .இதற்காக இந்தியாவின் தூதரக இசையமைப்பாளர் ஏ.ர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
புதிய தேர்வு குறித்து ஏ.ர் ரஹ்மான் கூறியது ,BAFTA அமைப்புடன் இணைந்து பனிபுரிவதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் ,திரைப்படம் ,தொலைக்காட்சி மற்றும் விளையாட்டு போன்றவற்றில் உள்ள அறிய திறமைகளை வெளிக்குணர்வதற்க்காக BAFTA அமைப்போடு இணைவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.BAFTA அமைப்பால் தேர்வு செய்யப்படும் கலைஞர்கள் ,மற்ற கலைஞர்களின் நடப்பு கிடைப்பதோடு ,BAFTA அமைப்பின் விருது அவர்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கும் என கூறியுள்ளார் .
கடந்த வருடம் BAFTA அமைப்பு இந்த புதிய திட்டத்தை சீனாவில் செயல்படுத்தியது . தற்போது இந்தியாவில் இந்த அமைப்பானது இந்தியாவின் முதல் ஐந்து திறமைகளை கண்டறிந்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது . BAFTA அமைப்பானது இந்தியாவில் ஏ.ர் .ரஹ்மான் உதவியுடன் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளது .