TNPSC குரூப் 4 VAO தேர்வெழுதும் தேர்வர்கள் கவனத்திற்கு ..

tnpsc-group-4-exam-pattern

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 மற்றும் VAO போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தேர்வர்களுக்கான சில முக்கிய விவரங்கள் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது .

தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குரூப் 1 முதல் குரூப் 4 மற்றும் VAO வரையுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் TNPSC தேர்வுகள் கட்டாயமாகும்..

நடப்பு ஆண்டுக்கான TNPSC தேர்வுகள் குறித்த அட்டவணை கடந்த 2020ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் துவங்கி கொரோனா 2ம் அலை தீவிரமடைந்து வந்ததால், திட்டமிடப்பட்ட போட்டித்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தற்போது நோய் தொற்று குறைந்திருக்கக்கூடிய சூழலில் இந்த போட்டித்தேர்வுகளை மீண்டும் நடத்துவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) முடிவு செய்துள்ளது.

இந்த வகையில் இம்மாதம் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

குரூப் 4 பதவிகள் :

  • இளநிலை உதவியாளர் (Junior Assistant)
  • தட்டச்சர் (Typist)
  • சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
  • கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer)
  • வரித் தண்டலர் (Bill Collector)
  • நில அளவர் (Field Surveyor)
  • வரைவாளர் (Draftsman)

குரூப் 4 தேர்வுக்கான கல்வித் தகுதி :

  • குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி என்பது போதுமான கல்வித்தகுதியாகும்.
  • மேலும் , கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியமாகும்.
  • இது தவிர தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப் பணியின் போது கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படுவது உண்டு.

வயது வரம்பு:

  • டின்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வயது வரம்பு, 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.
  • கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு பொதுப்பிரிவில் 21- 30 மற்றும் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உள்ளது.
  • இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மற்ற பணிகளில், பொதுப் பிரிவினருக்கு 18 – 30 வரை மற்றும் பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரையும் சலுகைகள் உண்டு.
  • ஆனால் 12ம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பு தேவையில்லை.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.
  • எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண் கொண்ட 200 வினாக்கள் கேட்கப்படும்.
  • வினாத்தாள் அப்ஜக்டிவ் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

பாடத்திட்டம்:

  • மொழிப் பாடப்பிரிவில் தமிழ் அல்லது ஆங்கிலப் பாடங்களில் 100 வினாக்கள் கேட்கப்படும்.
  • இதில் ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • இந்த பாடத்திட்ட முறையில் மாற்றங்கள் அறிவிக்கப்படலாம்.
  • பொது அறிவு பிரிவில் 100 வினாக்கள் கேட்கப்படும்.
  • இதில் 75 பொது அறிவு கேள்விகளும், 25 திறனறி கேள்விகளும் அடங்கும்.

பொது அறிவியல் பிரிவுக்கான கேள்விகள்:

  • அறிவியல் – இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள்.
  • நடப்பு நிகழ்வுகள் – வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல்.
  • புவியியல் – புவி, சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள்.
  • வரலாறு – சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், தில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள் தென்னிந்திய வரலாறு – கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள்.
  • இந்திய அரசியல் – அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், மத்திய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து அமைப்பு.
  • பொருளாதாரம் – ஐந்தாண்டு திட்டங்கள், நில சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி.
  • இந்திய தேசிய இயக்கம் – தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பங்கு ஆகியவை கேட்கப்படும்.

திறனறி வினாக்கள்:

தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதம், சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நஷ்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) போன்ற தலைப்புகளிலிருந்து கேட்கப்படும்.

கட் ஆப் மதிப்பெண்கள்:

  • கேட்கப்படும் கேள்விகளில் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும்.
  • இத்தேர்வில் மதிப்பெண்கள் மட்டுமே தகுதியானது அல்ல.
  • அதனால் தேர்வர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கட் ஆப் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த கட் ஆப் மதிப்பெண்களை உறுதியாக கூற முடியாது.
  • ஒருவேளை பொதுப்பிரிவினர் 164 மதிப்பெண்கள் வரை எடுத்தால் மட்டுமே பணிக்கு வாய்ப்பு இருக்கும்.
  • அதே போல BC பிரிவில் -162, MBC பிரிவில் -162, BCM பிரிவில் -154, SC பிரிவில் -160, SCA பிரிவில் -155, ST பிரிவில் -156 மதிப்பெண்கள் சராசரியாக தேவைப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Next Post

நோபல் பரிசு 2021 : இலக்கியத்திற்க்கான நோபல் பரிசு அறிவிப்பு..

Thu Oct 7 , 2021
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டிற்க்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. நாவலாசிரியர் அப்துல்ரசாக் […]
Nobel-prize-won-for-literature-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய