
இந்தியாவின் மூத்த விஞ்ஞானியான உடுப்பி ராமச்சந்திர ராவ் அவர்களின் 89 வது பிறந்த தினம் இன்று ,இதனை நினைவுகூரும் வகையில் கூகுள் தன் டூடூலை வைத்து அவருக்கு மரியாதை செய்துள்ளது. கூகுள் நிறுவனம் எப்போதும் தன் முகப்புப் பக்கத்தில் வரலாற்றில் இடம்பிடித்தவர்களின் பிறந்த நாள்கள் மற்றும் நினைவு நாட்களை நினைவு கூறும் வகையில் அவர்கள் தொடர்பான டூடூல் ஒன்றை வைத்து மரியாதையை செலுத்தி வருகிறது .
இஸ்ரோவின் முன்னாள் தலைவரான உடுப்பி ராமச்சந்திர ராவ் அவர்கள் மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவை ஏவுவதற்கு முக்கிய பங்காற்றியவர் ஆவர் .இவர் 1984 முதல் 1994 வரை இஸ்ரோவின் தலைவராக தன் பணியைத் திறம்படச் செய்தார்.உடுப்பி ராமச்சந்திர ராவ் அவர்கள் 2017 ஆம் ஆண்டும் இவ்வுலக வாழ்வை நீத்தார் .
உடுப்பி ராமச்சந்திர ராவும் ,விண்வெளியும்
உடுப்பி ராமச்சந்திர ராவ் அவர்கள் 1932-ம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தார். இவர் காஸ்மிக் கதிர் (அண்டக் கதிர்) பற்றி ஆராய்ச்சி செய்யும் இயற்பியலாளராக தன் பணியைத் தொடங்கினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதலில் பணியாற்றிய உடுப்பி ராமச்சந்திர ராவ், முனைவர் பட்டத்தை பெற்று ,பின்பு நாசாவிலும் தனது பணியை மேற்கொண்டார்.
பின்பு இந்தியாவிற்கு திரும்பிய (1966 ஆம் ஆண்டு ) இவர் அகமதாபாத்தில் இயங்கிவரும் விண்வெளி தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம் ஒன்றில் வானியல் தொடர்பான படிப்பு ஒன்றை துவங்கி வைத்தார். மேலும் இந்தியாவின் செயற்கைக் கோள் தொடர்பான ஆராய்ச்சிகளில் 1972-ம் ஆண்டு முதல் பங்கெடுத்தவர், இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டா 1975-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு ,வெற்றி அடைந்தது,இதில் ராமச்சந்திர ராவ் அவர்கள் பெரும் பங்காற்றினார்.