
நாடு முழுவதும் கொரோனாவின் பெருந்தொற்று நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது .தமிழகத்திலும் கொரோனாவின் வேகம் அதிகரித்து கொண்டே வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது,எனினும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்த வண்ணமே இருந்தது.
எனவே ,தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்..
*தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி இல்லை.
• உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி
• காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
• அழகு நிலையம், முடி திருத்தும் நிலையங்கள் இயங்காது.
மேலும் அறிய ..தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு எதற்கெல்லாம் தடை மற்றும் அனுமதி