![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/03/NEET-Exam-coaching-class-for-govt-students.jpg)
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்த பிறகு,அவர்களின் விடுமுறை நாட்களில் இலவசமாக நீட் தேர்வுக்கான பயிற்சியை அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு வழங்கி உள்ளது.இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியை கட்டாயம் அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துத்துறை திட்டமிட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வானது வருகிற மே 3 ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.தேர்வு முடிந்ததும் ,மாணவர்களுக்கான விடுமுறை நாட்களில்,அதாவது ஜூன் மாதம் முதல் இலவச நீட் பயிற்சியானது ஆன்லைன வழியிலும், நேரடி வகுப்பாகவும் நடைபெற உள்ளது.