கோவின் இணையதளத்தில் 4 இலக்க பாதுகாப்பு எண் அறிமுகம் – மத்திய சுகாதார அமைச்சகம்

கோவின் செயலியில் இன்று முதல் 4 இலக்க பாதுகாப்பு எண்ணை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.கோவின் இணையதளமானது ,கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், அதற்கு முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியாகும்.

ஆனால்,கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தடுப்பூசி போடச் செல்லாதவர்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டதாக குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்துள்ளது.தடுப்பூசி போடப்பட்டதாக தவறான தகவல் பதிவு செய்வதை தடுப்பதறக்காகவே மத்திய அரசு இன்று (சனிக்கிழமை) முதல் ஒரு 4 இலக்க பாதுகாப்பு எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம்,தடுப்பூசிக்காக முன்பதிவு செய்தவர்களுக்கு அந்த 4 இலக்க எண் வழங்கப்படும்.அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது, அந்த 4 இலக்க எண் கேட்கப்படும். இந்த எண் கோவின் இணையதளத்திலும் பதிவு செய்யப்பட்டு, தவறான தகவல் பதிவு செய்வது தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோன நிலவரம் : ஒரே நாளில் புதிதாக 4,01,078 கொரோனா தொற்று..

Sat May 8 , 2021
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.கொரோனாவின் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து வருகிறது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,01,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற […]
corona-2-wave-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய