
2014 மார்ச் முதல் 2018 செப்டம்பர் வரையிலான காலத்தில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறுவதற்கான வழிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத்தாட்களாக மாற்றிடும் பொருட்டு அரசிதழில் அறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தேர்வர்கள் ,மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.இத்தருணத்தைப் பயன்படுத்தி ஒரு வெள்ளைத் தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தைக் குறிப்பிட்டு தேர் வெழு திய பருவம், பிறந்த தேதி, பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு ரூ.45க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதிய உறை ஒன்றை இணைத்து, உதவி இயக்குநர், அரசுத் தேர் வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், 16/1, வில்லி யம்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம் அருகில், திருச்சி என்கிற முகவரிக்கு வரும் 31.12.2021ம் தேதிக்குள் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2014 முதல் 2018 பருவத்திற்குப் பின்னர் தேர்வெழுதிய பருவங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழையும் பெற் றுக்கொள்ளலாம் என்றும் ,மதிப்பெண் சான்றிதழ்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.12.2021 ஆகும் என்றும் திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.