PGTRB – முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.

தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிதழ் ( PSTM ) சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 17.10.2021 லிருந்து 31.10.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

நோபல் பரிசு 2021 : பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு..

Mon Oct 11 , 2021
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்கிற சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கு தற்போது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
Nobel-Prize-For-Economics-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய