நவம்பர் முதல் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படாது – சென்னை பல்கலைக்கழகம்..

இளநிலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான அனைத்துப் பருவத் தேர்வுகளும் வரும் நவம்பர் மாதம் முதல் நேரடியாகவே நடத்தப்படும், ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி கூறுகையில், நவம்பர் மாதம் முதல், அனைத்து மாணவ, மாணவியர்களும் பருவத் தேர்வுகளை நேரில் வந்து வகுப்பறைகளில்தான் எழுத வேண்டும்,ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெற்ற அனைத்துக் கல்லூரிகளும், மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நேரடியாக தேர்வுகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் - தமிழக அரசு அறிவிப்பு..

Sat Oct 23 , 2021
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் கூடுதல் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் , தமிழகத்தில் தளர்வுக்ளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.*அனைத்து வகை கடைகள், மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கம். நவம்பர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி தமிழகத்தில் தனித்து […]
TN-Lockdown-extended
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய