“இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டம் : தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம் ..

மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்காக மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டமே “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டமாகும் .

“இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டம் :

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாக சந்தித்து முறையான ஆலோசனைகளை பெற முடியாத இக்கட்டான சூழ்நிலையில் ,மத்திய அரசு பொதுமக்களுக்காக ,அவர்கள் இருக்கும் இடத்தில இருந்தே சரியான ,தெளிவான மருத்துவ ஆலோசனைகளை கேட்டறிய கொண்டு வரப்பட்ட திட்டமே “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டம் ஆகும் .

இத்திட்டத்தின் மூலம் மக்கள் தங்களது ஆலோசனைகளை இணையதளம் மூலமாகவும் ,ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் தங்களது தொலைபேசி எண்களை பதிவு செய்து ,பின்னர் மருத்துவருடன் காணொளிமூலம் நேரடியாக ஆலோசனைகளை பெறலாம்.

இதுவரை இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுள்ளனர் . இதில் அதிக ஆலோசனைகளை பெற்று தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் வகித்து வருகிறது .இதுவரை 3.43 லட்சம் அழைப்புகள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது . இதனை தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலம் 3 லட்சம் அழைப்புகள் பெற்று இரண்டாம் இடத்தில உள்ளது .

Next Post

இந்திய உளவுத்துத்துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2021

Thu Dec 24 , 2020
இந்திய உளவுத்துத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 group “சி ” பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 01.Assistant central intelligence officer ,Grade ||,Executive காலிப்பணியிடங்கள் : 2000 மாத சம்பளம் : ரூ.44 ,900 – 1,42 ,400 தகுதி […]
Intelligence-Bureau-recruitment-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய