கல்வித் தொலைக்காட்சி மூலம் மீண்டும் பாடங்கள் நடத்த உத்தரவு – பள்ளிக்கல்வித் துறை..

Education-tv-for-school-students

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது வீசி வருகிறது.இதன் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இதில், 9 முதல் 11 வகுப்பு மாணர்வர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக 9 முதல் 11 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

பிளஸ் 2 மாணவரக்ளுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால் அவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கல்வி தொலைக்காட்சி மூலம் அதிக பாடங்களை நடத்தவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்தமுறை ஏற்பட்ட பொதுமுடக்கத்தின் காரணமாக வகுப்புகள் கல்வித் தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் சேனல்கள் மூலம் நடைபெற்றது பெரிதும் பயனுள்ளதாக இருந்தது என பலரும் கருது தெரிவித்தனர்.

இதன்படி,தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மீதமுள்ள பாடங்களை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தினமும் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் அதிக பாடங்களை விரைவில் முடிக்க கல்வித் தொலைக்காட்சி ஆசிரியர் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : இன்று புதிதாக 56,211 பேருக்கு தொற்று உறுதி

Tue Mar 30 , 2021
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது,நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,028 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,95,855 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா […]
covid-test-cases-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய