தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 374 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,280-ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக கோவையில் 1,982 பேருக்கும், ஈரோட்டில் 1,353 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 989 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

