தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 436, ஈரோட்டில் 330 பேருக்கும்,சேலத்தில் 233 பேருக்கும், தஞ்சாவூரில் 218 பேருக்கும், திருப்பூரில் 217 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 54 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,059 -ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்
![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/07/district-wise-corona-status-in-TN-5-7-21.jpg)
![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/07/district-wise-positive-corona-status-in-TN-5-7-21.jpg)