தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,810, சென்னையில் 1,971 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வந்த 463 பேர் பலியாகியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 26,128 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்றுக்காக தற்போது மருத்துவமனையில் 2,68,968 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு..
