தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 169 பேரும், சென்னையில் 139 பேரும், ஈரோட்டில் 132 பேரும், தஞ்சாவூரில் 102 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 22,188 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 29 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,966-ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

