தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகக்தில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து 27,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 15,54,759 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 3,01,580 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.