
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.எனினும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை.எனவே ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு இன்று ஆலோசனை மேற்கொண்டது.
இதன்படி,வரும் திங்கள் கிழமை முதல் (மே 24) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் ..
