தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 117, சென்னை 164, கோவையில் 179 பேரும், ஈரோட்டில் 140 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி 21,521 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 29 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,995-ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

