நிபா வைரஸ் நோய்க்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு..

நிபா வைரஸ் ஆனது முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்டது.மேலும் இது குரங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்று தெரிய வந்ததுள்ளது.உயிர் கொல்லி நோயான நிபா வைரஸ் மேலும் பரவி விடாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இதற்கான தடுப்பூசி மருந்தை தற்போது இங்கிலாந்தில் உள்ள ஜென்னர் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

நிபா வைரஸ் தடுப்பூசியானது வைரசின் மரபணுவை பகுத்தாய்வு செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தடுப்பூசியானது 8 வகையான குரங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டு,பின்பு நன்றாக வேலை செய்வது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பச்சை வகை குரங்கின் வைரசை இந்த தடுப்பூசி முழுமையாக அழிப்பது ஆய்வில் தெரிகிறது.இன்னும் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற இருக்கின்றன.இதிலும் வெற்றி கிடைத்தால் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துக்கு ‘சாட் ஆக்ஸ் &1’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Next Post

தமிழக அரசு பள்ளிகளில் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை - பள்ளி கல்வித்துறை..

Tue Sep 7 , 2021
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வதன் காரணமாக இந்த மாதம் இறுதி வரை சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும்,கல்லூரிகளும் மூடப்பட்டன.தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் காரணமாக பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், […]
Govt-school-admission-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய