
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் தீவிரம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது.உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளில் தீவிரமடையத் தொடங்கியது.உலக சுகாதார நிறுவனம் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதன் மாறுதல் மற்றும் தீவிரத்திற்கு ஏற்ப பெயர்களை சூட்டி வந்தது.
இதில் குறிப்பாக இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பி.1.617 முதன் முறையாக கண்டறியப்பட்டது.பின்னர் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பி.1.617.1 மற்றும் பி.1.617.2 என்ற இரண்டு ரகங்களாக பிரிக்கப்பட்டது.இவற்றில் பி.1.617.1 ரகத்திற்கு உலக சுகாதார அமைப்பு கப்பா என்ற பெயரையும், பி.1.617.2 ரகத்திற்கு டெல்டா என்ற பெயரையும் சூட்டியுள்ளது.
இந்தியாவில் உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரஸ் மற்ற ரக வைரஸ்களை காட்டிலும் மிக தீவர பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.இதன் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளதால் இதை கவலையளிக்கும் ரகமாக வகைப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணமான டெல்டா மரபணு மாற்ற வைரஸ், நினைப்பதை விட மிகவும் கொடூரமானதாக இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்
இந்தியாவில் பரவி வரும் டெல்டா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு இருந்த அறிகுறிகளுடன், காது கேளாமை, தீவிர வயிற்றுக் கோளாறுகள், உறுப்புகள் சிதையும் அளவுக்கான ரத்தம் உறைதல் ஆகிய புதிய விளைவுகளும் தோன்றுவதாக மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கூறுகின்றனர்.
இந்தியாவில் பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரஸ் ஆனது,பிரிட்டனில் காணப்பட்ட ஆல்பா மரபணு மாற்ற வைரசை விட 50 சதவீதம் அதிக தொற்றும் ,திறனும் உடையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா, காமா ரக மரபணு மாற்ற வைரஸ் தொற்றால் ஆபத்தான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.