தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு..

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி பொதுமுடக்கத்தை ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கானது 31-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த்தொற்று மாநிலத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டசெயல்பாடுகள் தவிர கூடுதலாக எந்தவித தளர்வுகளுமின்றி 31-7- 2021 முதல் 9-8-2021 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு குறித்து தமிழக அரசு வெளியிட அறிக்கையில்,

  • வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக உடல் வெப்ப நிலை பரிசோதனையை செய்ய வேண்டும்.
  • அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடும் பகுதி அடையாளம் காணப்பட்டால் அந்த பகுதியை மூட மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யலாம்.
  • அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • விதிமுறைகளை முறையாக கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறைக்கு முதல்வர் அறிவுறுத்தல்
  • நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும்
  • கொரோனா கண்டறிதல்,சிகிச்சை, தடுப்பூசி ஆகிய பணிகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தவறாக பயன்படுத்தினால் பெரும் பாதிப்பு உருவாகும்.
  • 3-வது அலையை தடுக்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.முகக்கவசம் ,சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைபிடித்தால் அவசியமாகும்.மேலும் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுதல் அவசியமாகும்.

Next Post

பிளஸ்-2 துணைத்தேர்வுகளுக்கு ‘ஹால்டிக்கெட்' இன்று வெளியீடு..

Sat Jul 31 , 2021
கொரோனா பெருந்தொற்று காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது.இதன் காரணமாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், அதில் திருப்தி இல்லாதவர்களுக்கும், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தவர்களுக்கும் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.இதில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச்சீட்டு) 31-ந்தேதி (இன்று) காலை 11 […]
plus-2-hall-ticket-released-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய