இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று வெகுவாக குறைந்துள்ளது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 46,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,02,79,331 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 979 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,93,09,607 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,96,730 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 58,578 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,72,994 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.இந்தியாவில் இதுவரை 32,36,63,297 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Next Post

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று சாதனை..

Mon Jun 28 , 2021
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியானது குரோஷியாவில் நடைப்பெற்று வருகிறது. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சார்ந்த ரஹி சர்னோபத் கலந்து கொண்டார்.மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை சர்னோபத் இறுதிச்சுற்றில் 39 புள்ளிகள் பெற்று […]
Rahi-Sarnobat-won-gold-inworld-shooter-champion
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய