இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 25,404 பேருக்கு தொற்று..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 25,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,32,89,579 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 339 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,213 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,24,84,159 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,127 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,62,207 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியே 22 லட்சத்தை கடந்துள்ளது.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 14,30,891 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

நாடு முழுவதும் இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி..

Tue Sep 14 , 2021
இந்தியாவிலும் 12 வயதில் இருந்து 17 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.உலகில் பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது 75 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.அனால் இந்த தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடுவதற்கு ஏற்றதாக தயாரிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடிய ‘சைகோ வி-டி’ என்ற புதிய […]
Zycov-D-vaccine-for-child-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய