இந்தியாவில் புதிதாக 12,514 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 12,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,42,85,814 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,58,437 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,36,68,560 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,58,817 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்தியாவில் இதுவரை 1,06,31,24,205 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 106 .31 கோடியை கடந்துள்ளது.

Next Post

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..

Tue Nov 2 , 2021
நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.இத்தேர்வை சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.இதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.இந்நிலையில் தற்போது நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகரியின் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தேர்வு […]
NEET-Exam-result-announced
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய