இந்தியாவில் 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 25,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,50,679 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 437 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,32,079 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,14,48,754 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,830 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,69,846 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.15% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 55,47,30,609 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

மத்தியப் பல்கலைக்கழக கல்லூரிப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வுத் தேதி அறிவிப்பு : விண்ணப்பப் பதிவு தொடக்கம் - CUCET 2021

Tue Aug 17 , 2021
நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்க்காக பொது நுழைவுத் தேர்வு (சியூசெட்) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்லூரிப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுத் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும் இதற்கான விண்ணப்பப் பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் முன்னதாக கூறியிருந்தது. […]
CUCET-exam-date-and-application-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய