கொரோனா பாதிப்பானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.இந்தியா முழுவதும் ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை கடந்து வருகிறது.இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.தற்போது அனைத்து மாநிலங்களிலும் உள்ள உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் வேகமாக நிரம்பிவருகின்றன.
மருத்துவரின் ஆலோசனைகள் :
*வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்பவர்களுக்கு ஆரோக்கிய உணவு அவசியம். அவர்களது அறைகளை துாய்மைப்படுத்த கிருமி நாசினிகள் கட்டாயம் இருத்தல் அவசியம்.
*கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான மருந்துகள் கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி முகக் கவசம் ஆகியவை போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.
*முககவசங்களை ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
*பல்ஸ், ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர் ஆகியவற்றை வைத்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
*நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கையுறைகள் ,மற்றும் இரண்டு முக கவசங்கம் அணிவது அவசியம்.
*நோயாளியின் அறையில் இருக்கும்போது கதவு ஜன்னல்களை திறந்து வைத்தல் அவசியம்.
*லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுதல் அவசியமாகும்.