இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : புதிதாக 37,875 பேருக்கு தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 37,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,30,96,718 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 369 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,411 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,64,051 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 39,114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,91,256 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 70,75,43,018 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

வேளாண்மைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்..

Wed Sep 8 , 2021
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2021-2022 ஆம் கல்வியாண்டில் , 11 பட்டப்படிப்புகளை , 18 உறுப்பு மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்குகிறது.இந்நிலையில் இன்று முதல் மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற இருக்கிறது. மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் கல்வி கற்பிப்பதில் உலகத்தரம் வாய்ந்த ஒரு முதன்மை நிறுவனமாகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த உயர்கல்வி படிப்புகளை வழங்குவது […]
TNAU-admission-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய