முகக்கவசம் நம் உயிர் கவசம் : தென்றல் காற்றிலும் பரவும் கொரோனா – ஆராய்ச்சி தகவல்..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இதில் வீட்டை விட்டு வெளியில் வந்து ஒருவர் , இருமுகிற போது அதே திசையில் மெல்லிய தென்றல் காற்று சில்லென்று வீசினால் அது கொரோனா தொற்றை விரைவாக பரப்பும் என கண்டறிந்துள்ளனர்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் அமித் அகர்வால் கூறும்போது, “எங்கள் ஆய்வு முடிவுகள் அடிப்படையில், வீட்டுக்கு வெளியே வந்து விட்டாலே முக கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சில்லென்று காற்று வீசுகிற சூழலில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்” என தெரிவித்தார். மேலும் முழங்கையில் இருமுவதும் அல்லது முகத்தை திருப்பிக்கொண்டு இருமுவதும் வெளியே கொரோனா பரவுகிற வாய்ப்பைக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Post

நவம்பர் 1 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி : தமிழக அரசு..

Thu Oct 14 , 2021
கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு சிலவற்றிற்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.அவை .. மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம். தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருள்காட்சிகள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம். மழலையர், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் […]
TN-Extention-from-nov1
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய