
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் முழு ஊரடங்கானது மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 3,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் 1,742 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு..
