மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா..

இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் ,24 மணி நேரத்தில் (இன்று காலை வரை) 14,199 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையானது 1,10,05,850 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.கொரோனாவின் பரவல் காரணமாக கேரள மாநில எல்லைகளை ,கர்நாடக அரசு தற்போது மூடியுள்ளது.கர்நாடக அரசு கூறுகையில் ,72 மணி நேரத்துக்கு முன்னர் எடுத்த கொரோனா எதிர்மறை சான்றிதழ்கள் உள்ளவர்கள் மட்டுமே மாநில எல்லைக்குள் அனுமதிப்பதாக கூறியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் சுமார் 1,50,055 பேர் கொரோனா தொற்றிற்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் .மேலும் கொரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதும் 1,11,16,854 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றால் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருந்து வருகிறது.இதுவரை அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 2,87,65,423 ஆகும்.

Next Post

சிப்காட் (SIPCOT) வேலைவாய்ப்பு - AE(Civil) / Civil Consultant ..

Mon Feb 22 , 2021
சிப்காட் (SIPCOT – State Industries Promotion Corporation of Tamilnadu Ltd ) நிறுவனமானது காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள மொத்தம் 07 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது . மேலும் விவரங்களை பெற என்ற sipcot.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும் . 1 .உதவி பொறியாளர் (Assistant Engineer (Civil)) : கல்வித் தகுதி : B.E (Civil) மற்றும் தொழில்நுட்பம்பணிக்கான […]
SIPCOT-jobs-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய