இந்தியாவில் புதிதாக 30,549 பேருக்கு கொரோனா தொற்று..

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட வெகுவாக குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 30,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,17,26,507 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,25,195 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,08,96,354 ஆக உள்ளது.நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 38,887 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,04,958 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாட்டில் இதுவரை 47,85,44,114 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..

Tue Aug 3 , 2021
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட்டது.மேலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பருவத் தேர்வு மற்றும் உள்மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்ப்பட்டது.இந்நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. […]
cbse-10th-results-announced-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய