
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.கொரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தமிழகத்தில் முழு ஊரடங்கானது மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,86,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,75,55,457 ஆக உள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,660 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,48,93,410 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,18,895 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 2,59,459 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் குணமடைந்தோர்களின் விகிதம் 90.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.மேலும் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 23.43 லட்சமாக குறைந்துள்ளது.தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 23,43,152 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 20,57,20,660 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.