
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்று ஒரேநாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.இதில் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது .
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்த முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,10,77,410 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,980 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,72,80,844 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,30,168 ஆகும் .
இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 35,66,398 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 16,25,13,339 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.