
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .மேலும் பலி எண்ணிக்கை 89 ஆக உள்ளது .
வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக17 ,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையானது 1,11,56,923 ஆக உள்ளது .
மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி ,இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 1,08,26,075 ஆகவும் ,கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,57,435 ஆக உள்ளது .
நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,73,413 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் .மேலும் நாடு முழுவதும் 21,91,78,908 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ,புதன்கிழமை மாலை நிலவரப்படி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,66,16,048 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.