நாடு முழுவதும் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்று பாதிப்பை விட இன்றைய பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,07,52,950 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 911 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,98,88,284 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,05,939 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 44,459 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,58,727 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாட்டில் இதுவரை 36,89,91,222 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

லாம்டா வகை கொரோனா : டெல்டாவை விட மிக ஆபத்தான வைரஸ்..

Fri Jul 9 , 2021
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது வெவ்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது.குறிப்பாக டெல்டா வைரஸ்,இந்த வைரஸ் ஆனது இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டதாகும். லாம்டா வகை கொரோனா வைரஸானது தென் அமெரிக்க நாடான பெருவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. இந்த நாட்டில்தான் கொரோனவால் பாதிக்கப்பட்டவா்களின் உயிரிழப்பு விகிதம் உலகிலேயே மிக அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. புதிதாகப் பரவி வரும் லாம்டா வகை கொரோனா வைரஸானது, டெல்டா வகைக் கொரோனவை […]
Lambhda-variant-virus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய