தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,041 பேருக்கும், கோவையில் 3,632 பேருக்கும கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
