
இந்தியாவில் கொரோன பாதிப்பு தொடர்ந்து 4 லட்சத்தை கடந்த பாதிப்பு தற்போது படிப் படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் இருந்தாலும்,உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கினாலும்,தினசரி பலி எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்தை கடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,54,96,330 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,19,86,363 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆகும் .
இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 32,26,719 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 18,58,09,302 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.