இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று வெகுவாக குறைந்துள்ளது .கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,04,58,251 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 853 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,95,48,302 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,00,312 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 59,384 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,09,637 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாட்டில் இதுவரை 34,00,76,232 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் -மத்திய அரசு அறிவிப்பு..

Fri Jul 2 , 2021
நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இதில் கர்ப்பிணிகள் மட்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில் கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா ,என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் […]
corona-vaccination-for-pregnancy
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய