![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/06/corona-in-kovai.jpg)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 3,332, சென்னையில் 2,467 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 490 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 24,722 ஆக உயர்ந்துள்ளது.. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு..
![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/06/district-wise-corona-in-tamilnadu-1-6-21.jpg)