
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,838 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது .
இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக 16,838 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,73,761 ஆக அதிகரித்துள்ளது உள்ளது .இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது .
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) அறிக்கையின் படி ,இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,39,894 ஆக உள்ளது.கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 1,57,548 ஆக உள்ளது .
இந்தியா முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,76,319 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் .மேலும் நாடு முழுவதும் 21,99,40,742 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .நேற்று (வியாழக்கிழமை) மாலை நிலவரப்படி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,80,05,503 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.