கொரோனா 3-வது அலை விரைவில் இந்தியாவை தாக்கும் அபாயம் – இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை..

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில் ,தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவை தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் சங்கம் கவலை தெரிவித்ததோடு ,எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

சர்வதேச புள்ளிவிவரங்கள் படி , கொரோனா 3வது அலை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் ,எந்த நேரத்திலும் 3வது அலை இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.சுற்றுலா , புனித யாத்திரை பயணம், மத உற்சாகம், அனைத்தும் தேவை என்றாலும், இன்னும் சில மாதங்கள் காத்திருக்கலாம் எனவும்,தடுப்பூசி போடாமல் மக்களை இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிப்பது 3-வது அலையை உறுதி செய்வதாகும் என மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

Next Post

விரைவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜைகோவ்-டி தடுப்பூசி..

Tue Jul 13 , 2021
கொரோனா தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு,பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக கோவிஷியல்ட் ,கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் v தடுப்பூசிகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு, செலுத்தப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசிகள் முதல் தவணையாக செவிலியர்களுக்கு ,முன்கள பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது, பின்னர் 45 வயது மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி (ZyCov-D) என்ற தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த மத்திய மருந்து […]
covid19-vaccine-for-kids
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய