
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தவும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டத்தை வழங்கவும் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.