
இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது .இதில் குறிப்பாக மகாராஷ்டிரா ,கேரளா ,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது .
கொரோனா தொற்று அதிகரிப்பால், நாக்பூரில் முழுப் பொதுமுடக்கம் அமல் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த சில நாட்களாக நாக்பூரில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.இதனைத் தொடர்ந்து நாக்பூரில் மார்ச் 15 முதல் 21 வரை முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் ரௌத் தெரிவித்துள்ளார் .
மேலும், நாக்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மார்ச் 15 முதல் 21 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் ,மேலும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அறிவித்து ,பின்னர் படிப்படியாக தளர்வுகள் விளக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .