பிப்ரவரி 8 முதல் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு ..

கொரோன பொதுமுடக்கத்தின் காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த நிலையில் ,தற்போது பிப்ரவரி 8 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .

இதன்படி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் ,கொரோனா தொற்று பரவல் காரணமாக ,கல்லூரிகள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது .

மேலும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் ,சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் ,கல்லூரி நிர்வாகமானது கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு கட்டாயம் கிருமி நாசினிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ,இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் தொடர்ந்து 6 நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது .இதன்படி பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் திறக்கப்படும் கல்லூரிகள் தொடர்ந்து 6 நாட்கள் செயல்படும் .

Next Post

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் - ஓர் பார்வை ..

Fri Feb 5 , 2021
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான நிதி பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்தார் .கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் ,இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல .நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்யும் 3 வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் ,உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, வளர்ச்சி, மனித மூலதனம், புதுமை […]
nirmala-seetharaman
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய