கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..

தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் பயிலும் 2 மற்றும் 3வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

2021-22 புதிய கல்வியாண்டு தற்போது தொடங்கியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகளும் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் துவங்குமா என்று எதிர்பார்ப்புகள் அனைவரும் மத்தியில் எழுந்து வருகிறது.

இந்நிலையில் கல்லூரிகளில் 2 ஆவது மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா 2 ஆம் பரவல் குறைவதை பொறுத்து தான் உயர் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Post

ஜே.என்.யு. நுழைவுத் தேர்வு இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம்..

Wed Jul 28 , 2021
தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (ஜே.என்.யு.இ) செப்டம்பர் 20 முதல் 23 வரை இரண்டு அமர்வுகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.என்.யு. நுழைவுத் தேர்வுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.பல்கலைக் கழகத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் jnuexams.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.என்.யு. நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி […]
JNU-Entrance-Exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய