
உலக நாடுகள் அனைத்தும் தற்போது விண்வெளியில் தங்களது முழு ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சி செய்து வருகின்றன.விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக,சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் தியான்வென்-1 விண்கலத்தை அனுப்பியது.இந்த விண்கலமானது கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்துள்ளது.தற்போது செவ்வாய்கிரகத்தில் தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியான்வென்-1 விண்கலம் :
சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய்கிரகத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. தியான்வென்-1 விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும்.மேலும் இவை 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்டுள்ளது.
தியான்வென்-1 ரோவர் விண்கலத்துடன் ஐந்து கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன .இவை செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன.தற்போது செவ்வாய்க்கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பி சாதனை படைத்துள்ளது.சந்திரயான் விண்கலத்தின் மூலம் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை இந்தியா கண்டறிந்தது, விண்வெளியில் ஒரு மைல் கல்லாகவே இருந்து வருகிறது.